Sunday, November 9, 2008

அழுது விடுவேனோ

"நான்
அழுது விடுவேனோ என்று
நீ சிரித்து போவது
இன்றைய
சந்திப்பின் பிரிவிலும்..."

தரிசனம் பெற

விதி
உருவாக்காத
சந்தர்ப்பத்தை...
உன் வீதி
உருவாக்கித்தரும்!...
உன்
தரிசனம் பெற..."

கல் மனம்

கல் மனம்!
உனக்கல்ல...
உன் அழகின்
மொத்த எடையை
தாங்குகிற
உன் வீட்டுக்கண்ணாடிக்கு..."

தனிமை

"இத்தனிமை
காற்றாடி மேல்
வைத்த கல் போல!
துடித்துக்கொண்டிருக்கிறது...

உன் மூச்சுக்காற்றில்
பறக்க..."

நீ கசப்பதில்லை

"உண்மையும்,
நீயும் ஒன்றல்ல!
ஏன் தெரியுமா?
நீ கசப்பதில்லை!..."

Thursday, November 6, 2008

இது ஐந்து

"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
இது நான்கு…
ஐந்தாவதாய்
நீயெனை பார்க்கும் போது..."

விடை

"நீ என்னை கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும்
விடை நீதான்..."

தாய் போல்!

"நீ என் தாய் போல்!
எனை நடை மறக்கச்செய்து
மழலையாக்குகிறது!
௨ன் முகம்..."