Thursday, August 5, 2010

விடுதலை கொடு!

"மௌனம் என்கிற
மரண தண்டனை
விதிக்கப்படும்
வார்த்தைகளுக்கு,
விடுதலை கொடு
உதடு வழியாய்...

மொத்த மொழியையும்
உன் அன்பில்
அடிமையாக்கி
ஆயுள் கைதியாக்குகிறேன்..."

Thursday, July 29, 2010

மோதல்

"நம் ஊடல்,
இரு பூக்களின்
மோதல் போல்...

சிதறிப்போவது
தேன் துளிகள்
மட்டுமே..."

Tuesday, April 20, 2010

நீயெனக்கு போதவில்லை

"நீயெனக்கு
போதவில்லை...

என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...

நீயெனக்கு
போதவில்லை..."

Friday, April 9, 2010

நீயே என் உலகம்

"இனம் புரியாத
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,

உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!

புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!

எனை பிடித்துப்போ!

நீயே என்
உலகமாகிப்போவாய்..."

Wednesday, March 24, 2010

தாயுமானவன்

"ஆணாகப் பிறந்தும்
தாய்மை உணர்வு கொண்டது...
என் இதயத்தில்
கருவுற்ற
காதலால் தானடி..."