“அலைகள்
ஒதுக்குகின்ற
கரையோர சோழிகள் போல...
என் ஒவ்வொரு
பார்வையையும்
நீ ஒதுக்கும் போது
புரிந்து கொள்!...
மீண்டும்
அதே அலைகள்
அதே சோழிகளை
இழுத்துச்செல்லும் என்று!…”
© Girinath.G - All Rights Reserved. Please do not copy/print/publish/use/reproduce the poems from this blog in any form/format without my permission. All poems are registered and copyrighted.
Thursday, December 18, 2008
கரையோர சோழிகள்
Thursday, December 11, 2008
காதல் என்பது
உன் நெஞ்சில் புதைந்து
போகிற என் முகம்...
என் முடிக்கற்றைகளை
கோதுகிற உன் விரல்கள்...
உன் ஆறுதலுக்கு
ஏறுடுகிற என் கண்கள்...
என் தவிப்பில் மட்டுமே
தனிந்து போகிற உன் கோபம்...
உன் உறக்கம் தாங்கும்
என் தோழமைத்தோள்கள்...
என் நிழலையும் நேசிக்கும்
உன் அழகான குணம்...
உன் கண் விழிப்பில் மட்டுமே
காணும் என் விடியல்...
காதல் என்பது...
சுக தியானம்
"ஏதோ சொல்ல மறந்த
வார்த்தைகள் மட்டும்
மிஞ்சிப்போகின்றன என்னுள்...
கொஞ்சம் தியானித்து
மறந்தவைகளை உணர
ஒருமுகப்படுத்தும்
உன் நினைவு மட்டும்
தேவையாகிப்போகிறது...
இந்த சுக தியானத்திற்கு
என் உயிர் கூட
எனை மறந்து போகட்டும்!
அதில் உன் நினைவு மட்டும்
மருந்தாகி போகட்டும்..."
சுகமாய் போகும்
"உன் நினைவற்ற
சில மணித்துளிகள்
என் ஜென்மத்தை
சிறிதாக்கி விடுகிறது...
உபயோகிக்காத
வார்த்தைகளின் பிரயோகம்
என் சொல்லுதலை
சுருக்கி விடுகிறது...
முற்றிலுமாய் எனை மறந்த
என் நெஞ்சம்
உணர்வுப்பிரவாகமாகி விடுகிறது...
காதலிக்காவிட்டால் தான் என்ன?...
எழுதி களைத்துப்போன
என் கைகளுக்காவது
கவிதையாகிப்போ!...
-- எல்லாம் சுகமாய் போகும்..."
உண்மைக்காதல்
"என் முகம் பாராமல்
முணுமுணுக்கும்
உன் உதடுகளுக்கு
நான் வார்த்தைகள் போட்டு
வாழ்ந்தது போதும்!
கடைசியாக பேசிவிடு!
அல்லது மௌனித்து விடு!
உண்மை காதலையாவது
உணர்ந்து போகிறேன்..."
Wednesday, December 3, 2008
நீ என் முதல்
ஆக்கிரமிக்கும் முதல் வரி..."
"நீ என் காதலை
நனைத்த முதல் மழை..."
"நீ என் உறக்கத்தை
கலைத்த முதல் கனவு..."
"நீ என் கண்களில்
கண்ட முதல் விடியல்..."
"நீ என் உண்மையாய்
உருகிய முதல் உயிர்..."
"நீ என் பிறப்பின் பயனை
சொன்ன முதல் கரு..."
Sunday, November 9, 2008
Thursday, November 6, 2008
Tuesday, October 21, 2008
ச்சீய் போடா!
"முகம் சுளித்து
கொஞ்சலாய்
ச்சீய் போடா! என்றாய்...
உறைந்து போனேன்!
அது மொத்தமாய் வாடா!
என புரிந்த பிறகு
விரைந்து போனேன்!..."
சூரியன், நிலா
என மாறும்
இந்த சூரியனும், நிலவும்
என்னுள் மாறிக்கொண்டது
உன் சந்திப்பிலிருந்து..."
Thursday, October 16, 2008
புது நிலவு
முறையேனும்
பார்த்திருப்பேன்...
இருப்பினும்
இந்த நிலவு
புதியதாய் தெரிவது
உன் அருகாமையில்
மட்டும்..."
Wednesday, October 15, 2008
நானாகிப்போகிறேன்
"காதலின் அத்தனை
பரிமாணங்களையும்
காட்டியாகிவிட்டது...
கடைசியாக,
நீ முகம் காட்டி
கண் சிமிட்டி போ...
உன் கண்களுக்குள்
தங்கிப்போய்
காண்பதெல்லாம்
நானாகிப்போகிறேன்..."
காதல் கடிதம்
"உன் பாதம் பட்ட கடற்க்கரை மணல்...
உன் உடல் நனைத்த மழை நீர்...
உன் மூச்சு கலந்த தென்றல் காற்று...
உன் கூந்தல் பறந்த வானம்...
உன் நேர்மையான சுட்டெரிக்கும் பார்வை...
எல்லாம் தயார்
நம் காதல் கிரகப்பிரவேசத்திற்கு...
உனை அழைக்க
அழைப்பிதழ் மட்டுமே மீதி..."
நான் தோற்றேன்
"உனை
பிடித்து இழுக்கும்
என் கைகளின் வலு...
எனை
பிடித்து அழைக்கும்
உன் பார்வையின் பளு...
நான் தோற்றேன்!..."
என்ன செய்ய
உன் விரல்கள்...
பற்றிக்கொள் என பதறும்
உன் விழிகள்...
யார் பேச்சை கேட்பேன்
முதலில்?!..."
Tuesday, October 14, 2008
Thursday, October 9, 2008
Wednesday, October 8, 2008
கவிதையாக்கி
கவிதையாக்கி கவிதையாக்கி
முகம் மறந்து போனது
- காதல் பிறந்து போனதால்...
உன்னை
காதலித்து காதலித்து
எழுத மறந்து போனது
- நீ கவிதையாகி போனதால்...
உன்னை மீண்டும்
கவிதையாக்கி கவிதையாக்கி..."
காதல்ல நாம்
"சொன்னவுடன்
புரிந்து கொள்ள
காதல் ஒன்றும்
எனைப்போல் அல்ல...
என்ன சொன்னாலும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
நீ கூட காதல் அல்ல..."
Tuesday, October 7, 2008
Monday, October 6, 2008
Sunday, October 5, 2008
காதலில் மட்டும்
கானம் கேட்டு நினைந்து,
கடற்கரை கால் பதித்த காலங்கள்...
கவிதை சொல்லி, கேட்ட
பரிமாற்றங்கள்...
அதிகமாய் கொஞ்சி,
தொட்டணைத்த தேதிகள்...
நிலம் கொண்டு
நிலவில் கண்ட கனவுகள்...
இருவரும்
இழந்து போகிற
தருணங்களுக்கான
உளறல்கள்...
இவை காதலில் மட்டும்..."
வதை
உன்னுள் விதைத்து,
உன்னை நான்
என்னுள் விதைத்து,
நான் மட்டும்
வதைப்பட்டு கொண்டிருக்கிறேன்..."
Saturday, October 4, 2008
Friday, October 3, 2008
பார்த்த ஞாபகம்
உன் முகம்
முதல் முறை
பார்த்த ஞாபகம்...
முதல் முறை பார்த்தபோது
எத்தனையோ முறை
பார்த்த ஞாபகம்..."
௨ச்சி முகர்ந்து
௨ச்சரிக்கும்!
௨ன் முகம் ௨ரசி
௨ச்சி முகர்ந்த
என் ௨தடுகள்...
இனி
௨ண்மையே
௨ச்சரிக்கும்..."
ஒத்திகைகள்
ஓராயிரம் ஒத்திகைகள்...!
ஒட்டு மொத்தமாய்
௨டைந்து போகிறது
௨ன் முன்னால்..."