Thursday, January 29, 2009

தூரம்

"உன்
அருகாமையில்
இன்னும் கொஞ்சம்
அருகில் வர...
நான்
பயணிக்கும் தூரம்
மிக அதிகம்...!"

மண் வாசம்

"நீ வருவதும்,
மழை வருவதும்
எளிதாய் கணிக்கப்படும்...
ஏனெனில்
இரண்டிலும்
மண் வாசம்…”

காதல் கவிதை

"இதழ் பிரியாமல்
எனக்குள்
சொல்லிக்கொள்ளும்
கவிதை...
உனக்கும்
கேட்க்கும்மென்றால்!
அதுதான்
காதல் கவிதை..."

Friday, January 23, 2009

என்ன சொல்வது

"மிக யதார்த்தமாய்,
என் அருகில் அமர்ந்து,
தோள்கள் உயர்த்தி,
வானம் பார்த்து,
காற்றில் பயணிக்கும்
அந்த மழைச்சாரலை
ஸ்பரிசிக்கும் உனை
"கவிதை" என கூறாமல்
என்ன சொல்வது..."

ஆயுதம்

"எனை கண்டும்
காணாதது போல் கடந்து,
சட்டென்று முகம் திருப்பி
வஞ்சிக்கும்
உன் விழிகளுக்கு
என் கவிதை
வார்த்தைகள் மட்டுமே
பதில் ஆயுதம்..."

அன்பின்மை

"உருண்டோடி விழுகிற
கண்ணீர் மட்டுமே
என் அன்பின் மைய்யடி...
தீட்டிக்கொள்...
அல்லது
எழுதிக்கொள்...
எதுவாயிருப்பினும்
"கவிதை"
என்பேன் முடிவில்..."

உன் அழகு

"குழைத்து தீட்டுகிற
திரவியங்களில்
இல்லையடி உன் அழகு...!!!
நீ கோபத்தில்
செல்லமாய் சிணுங்குகிற
தருணங்களில் மட்டுமே..."

Thursday, January 15, 2009

நாடும் துடிப்பு

"என் நாடித்துடிப்பு
துண்டித்து...
இனி உனை
நாடும் துடிப்பில்
மட்டுமே இயங்கும்
என் இதயம்..."