Tuesday, April 20, 2010

நீயெனக்கு போதவில்லை

"நீயெனக்கு
போதவில்லை...

என் ஒவ்வொரு
கவிதையும்
கருத்தரித்து
கொண்டுதானிருக்கிறது
உன்னை...

நீயெனக்கு
போதவில்லை..."

Friday, April 9, 2010

நீயே என் உலகம்

"இனம் புரியாத
உணர்வால்
பதிவாகிக்கொண்டிருக்கும்
இக்கவிதைகளை,

உன்னைத்தவிர
இந்த உலகமே
உணர்கிறது!

புரிவதற்கு
இவைகளை
படித்து போகாதே!

எனை பிடித்துப்போ!

நீயே என்
உலகமாகிப்போவாய்..."