Wednesday, December 3, 2008

நீ என் முதல்

"நீ என் கவிதையில்
ஆக்கிரமிக்கும் முதல் வரி..."

"நீ என் காதலை
நனைத்த முதல் மழை..."

"நீ என் உறக்கத்தை
கலைத்த முதல் கனவு..."

"நீ என் கண்களில்
கண்ட முதல் விடியல்..."

"நீ என் உண்மையாய்
உருகிய முதல் உயிர்..."

"நீ என் பிறப்பின் பயனை
சொன்ன முதல் கரு..."

No comments: