காதல் என்பது...
உன் நெஞ்சில் புதைந்து
போகிற என் முகம்...
என் முடிக்கற்றைகளை
கோதுகிற உன் விரல்கள்...
உன் ஆறுதலுக்கு
ஏறுடுகிற என் கண்கள்...
என் தவிப்பில் மட்டுமே
தனிந்து போகிற உன் கோபம்...
உன் உறக்கம் தாங்கும்
என் தோழமைத்தோள்கள்...
என் நிழலையும் நேசிக்கும்
உன் அழகான குணம்...
உன் கண் விழிப்பில் மட்டுமே
காணும் என் விடியல்...
காதல் என்பது...
No comments:
Post a Comment