Thursday, December 11, 2008

சுகமாய் போகும்

"உன் நினைவற்ற
சில மணித்துளிகள்
என் ஜென்மத்தை
சிறிதாக்கி விடுகிறது...

உபயோகிக்காத
வார்த்தைகளின் பிரயோகம்
என் சொல்லுதலை
சுருக்கி விடுகிறது...

முற்றிலுமாய் எனை மறந்த
என் நெஞ்சம்
உணர்வுப்பிரவாகமாகி விடுகிறது...

காதலிக்காவிட்டால் தான் என்ன?...

எழுதி களைத்துப்போன
என் கைகளுக்காவது
கவிதையாகிப்போ!...

--
எல்லாம் சுகமாய் போகும்..."

No comments: