"உன் நினைவற்ற
சில மணித்துளிகள்
என் ஜென்மத்தை
சிறிதாக்கி விடுகிறது...
உபயோகிக்காத
வார்த்தைகளின் பிரயோகம்
என் சொல்லுதலை
சுருக்கி விடுகிறது...
முற்றிலுமாய் எனை மறந்த
என் நெஞ்சம்
உணர்வுப்பிரவாகமாகி விடுகிறது...
காதலிக்காவிட்டால் தான் என்ன?...
எழுதி களைத்துப்போன
என் கைகளுக்காவது
கவிதையாகிப்போ!...
-- எல்லாம் சுகமாய் போகும்..."
No comments:
Post a Comment